
தனது வாரியத்தின் புதிய தலைவராக டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஜாலாவிற்கு பதிலாக டத்தோ லைன் ஜோன் லோவின் நியமனத்தை ஹெய்னிகன் மலேசியா பெர்ஹாட் அறிவித்தது.
இந்த நியமனம் எதிர் வரும் 15 ஜூலை 2026-ல் அமலுக்கு வரும்.
மலேசிய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் வெளியிடப்பட்ட மலேசிய கார்ப்பரேட் ஆளுமைக்அ குறியீடு
(MCCG) கட்டமைப்பின் கீழ், சுயாதீன இயக்குனர்களுக்கான 9 ஆண்டுகள் பதவிக்கால வரம்பை ஆதரிக்கும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் தமது தலைவர் மற்றும் இயக்குனர் பதிவுகளிலிருந்து விலகுவார்.
அதே தேதியிலிருந்து டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் குழுமத்தின் ஆலோசகராக தொடர்ந்து ஆதரவளிப்பார்.
கடந்த 9 ஆண்டுகளாக டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் வழங்கிய தலைமைத்துவத்திற்கும் மற்றும் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கும் நிறுவனத்தின் வாரியமும் நீர் பாகமும் தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டன.
கடந்த ஜனவரி 2017-ல் வாரியத்தில் இணைந்தது முதல், அவர் வலுவான வழிகாட்டுதலையும் நிர்வாகத்தையும் வழங்கியுள்ளார்.
இது கோவிட்-19 பொருந் தொற்றின் சவால்கள் உள்ளிட்ட உருமாற்றம் மற்றும் பின்னடைவு காலங்களில் குடும்பத்தை வழிநடத்த உதவியது.
அவரது தலைமையின் கீழ், டிஜிட்டல் உருமாற்றம், பயனீட்டாளர்களுக்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் முக்கிய மதுபான ஆளை மேம்பாடுகள் உள்ளிட்ட முக்கிய மூலோபய முன்னுரிமைகளை வாரியம் கண்காணித்து வழி நடத்தியது.
அவர் தற்போது சரவா இறையாண்மை செல்வம் எதிர்கால நிதியத்தின் பாதுகாவலர் குழுவின் உறுப்பினராக பணியாற்றுகிறார்.
மேலும் RHB Bank Berhad மற்றும் RHB Investment Bank ஆகியவற்றின் சுயாதீன சாரா நிர்வாக இயக்குனராகவும்,Sepang International Circuit Sdn Bhd நிறுவனத்தின் வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.
டத்தோ இயன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலாளர் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டங்களை பெற்றுள்ளார்.
இவரின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்து பேசிய வாரியம், பெருகிய முறையில் மாறிவரும் மற்றும் சிக்கலான இயற்கை சூழலின் வணிகத்தை கண்காணிக்கவும் வழி நடத்தவும், குழுமத்தின் மூலோபய திசையை மேம்படுத்துவோம் டத்தோ இயனின் விரிவான தலைமைத்துவ அனுபவம் அவருக்கு நல்லதொரு நிலையை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தது.


