
மழைக்காலம் சருமத்தை மிகவும் பாதிப்படைய செய்கிறது. சிலருக்கு தோல் வெடிப்பு ஏற்படும் அல்லது எண்ணெய் பசைத் தன்மையுடன் இருக்கும். எனவே இந்த நேரத்தில் சருமத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடை காலத்தில் தான் சரும பிரச்சனை வரும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறை சீசன் மாறும் போதும் சருமப் பிரச்சனை ஏற்படும். குறிப்பாக மழைக்காலத்தில் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல் வறண்டு அரிப்பு பிரச்சனை ஏற்படும்.
மழைக்காலத்தில் சருமம் எண்ணெய் பசையாக மாறும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அதிகமாக வியர்க்கும். இதனால் முகப்பரு பிரச்சனை ஏற்படும். தோலில் இருந்து துர்நாற்றம் ஏற்படும்.


