
மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருனுக்கான ஆதரவை நெகிரி செம்பிலான் அம்னோ மீட்டுக் கொண்டது.
மாநில மந்திரி பெசார் மீது தங்களின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜாலாலுடின் அலியாஸ் கூறினார்.
நெகிரி செம்பிலான் அரசவை சம்பந்தப்பட்ட பூசல் மாநில நிலைத்தன்மை மற்றும் நிர்வாகத்தை பாதிக்கும் என அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
கடந்த 15 ஆவது மாநில சட்டமன்ற தேர்தலில் அம்னோ 14, பாக்காத்தான் ஹராப்பான் 17 மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் 5 தொகுதிகளையும் கைப்பற்றியது.


