
மலாக்கா சிலம்ப போர்களை சங்கத்தின் 30 ஆவது நிறைவு விழா அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு பிரமுகர்களாக திரங்கானு மந்திரி பெசாரின் மலாய்காரர்கள் அல்லாதவர்கள் பிரிவின் சிறப்பு அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன்,மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜி. சிவா, மஇகா பாகோ தொகுதி தலைவர் முனியாண்டி, மஹாகுரு பி. சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை தொடர்ந்து கட்டி காப்பது நமது தார்மீக கடமை என டாக்டர் பாலச்சந்திரன் கூறினார்.

நமது வரும் இளைய சந்ததியினர் கட்டொழுங்குடன் நம்பிக்கையுடனும் இருக்க இது மிக அவசியம் என்றார் அவர்.
நமது இந்திய சமூகத்திற்கு பெருமையை சேர்க்கும் கலைகளில் ஒன்று இந்த சிலம்பக்கலை என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த அற்புத கலையில் நமது இளைஞர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றார் அவர்.


