
நமது இந்து சமயமும் வழிபாட்டுத் தளங்களும் நமது நமது சமுதாயத்தை ஒன்றிணைக்க தவறியதில்லை என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
நமது சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வழிபாடு தளங்கள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு பூச்சோங் ஸ்ரீ மஹா மஹேஸ்வரி ஆலயத்தின் 52 ஆவது ஆண்டு திருவிழாவில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
இந்து ஆலயங்கள் நமது சமுதாயத்தின் ஒற்றுமைக்கு மாபெரும் பங்கை ஆற்றி வருவதாக அவர் சொன்னார்.

தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை களைய வழிப்பாட்டு தளங்கள் பொருத்தமான இடமென அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்வு அனைவருக்கும் அருளும் சமுதாயத்தில் நன்மையும் நலனும் வழங்கும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.


