
குழந்தை ஆபாசப் படங்களை சேமித்து, விநியோகித்த துயரம் மிகுந்த நடவடிக்கையில், அரசு ஊழியர் மற்றும் கணக்காய்வாளர் உட்பட நால்வரை மலேசிய போலிஸார் கைது செய்துள்ளனர்.
தேசிய போலிஸ்படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை இந்தக் கைது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தினார்.
பிப்ரவரி 24 முதல் மார்ச் 28 வரை சிங்கப்பூர் காவல்துறை தலைமையில் ஆறு நாடுகளில் ஒருங்கிணைந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட “சைபர் கார்டியன் நடவடிக்கையின்” போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஜாங், அம்பாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் ஆகிய பகுதிகளில் 26 முதல் 49 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 50,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாசக் காணொளிகள் மற்றும் படங்கள் சேமிக்கப்பட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம், இணையத்தில் குழந்தைத் தவறுதல்களை தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு இன்றியமையாதது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும், இன்னும் பலர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
👮♂️ “இது ஒரு திடுக்கிடும் உண்மை; நம்மை பாதுகாக்கும் இடங்களிலேயே ஆபத்து மறைந்து இருக்கிறது!” – நெட்டிசன்கள் கடும் கண்டனம்.


