
தம்போய் பிப் 8
எதிர்வரும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இங்குள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் மாசாய் இந்திய சமூக நல மேம்பாட்டு கழகத்தின் (மீவா) தலைவர் டத்தோ டாக்டர் புருஷோத்தமன், YSR தலைவர் சுகுமாரன் சிறப்பு வருகை புரிந்தனர்.
ஆலயத்தின் தலைவர் ஆறுமுகம் இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

வரும் பிப் 11 ஆம் தேதி தைப்பூச கொண்டாட்டம் இந்த ஆலயத்தில் சிறப்பாக நடைபெற இருப்பதாக ஆலய தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.
இந்த தைப்பூச கொண்டாட்டத்தில் திரளாக கலந்து கொள்ளும்படி வட்டார இந்துக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


