
சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தி திரைப்படம் குறித்த படத்தின் தலைப்பு தற்போது தமிழ்ச்சினிமாவின் பேசுப்பொருளாக மாறியுள்ளது
நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமான திரைப்படம் பராசக்தி. 1952ஆம் ஆண்டு பராசக்தி வெளியாகி தமிழ்ச்சினிமாவின் போக்கினை மடைமாற்றியது என்று சொல்லலாம்.
அதே தலைப்பை பயன்படுத்துவது குறித்து சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பராசக்தி என்று சொன்னாலே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் ஞாபகம் வருவார் என்றும் தலைப்பை படக்குழுவினர் மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தனர்.


