
பத்தாங் பெர்ஜூந்தாய் நவ 18
இங்கு கம்போங் சுங்கை டாரா ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலய வருடாந்திர சப்த கன்னி திருவிழாவில் தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்.
நேற்று முன்தினம் இந்து ஆலய சப்த கன்னி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆலய திருவிழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த துணை மைச்சர் சரஸ்வதிக்கு ஆலய நிர்வாகம் சிறப்பு செய்தது.

சக்தி வாய்ந்த ஸ்ரீ நாகேஸ்வரி அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க தாம் பிரார்த்திப்பதாக தமது உரையில் சரஸ்வதி கூறினார்.
நமது இந்துக்கள் இறை நம்பிக்கை கொள்வது மிகவும் அவசியம் என்றார் அவர்.
இறை நம்பிக்கை நம்மை பண்பட செய்யும் என்றார் அவர்.


