
சுங்கை பட்டாணி நவ 4
அண்மையில் நடைபெற்ற கோல மூடா(கெடா) மாவட்ட கராத்தே போட்டியில் சிஹான் டாக்டர் ராமன் நாயர் 5 ஆவது முறையாக கருப்பு பட்டையை பெற்றார்.
மலேசிய சமூராய் சம்மேளனத்தின் கியோஷி டத்தோ டாக்டர் விஜய் டாக்டர் ராமன் நாயருக்கு இந்த கருப்பு பட்டையை வழங்கினார்.
இந்த நிகழ்வில் கெடா கராத்தே கழகத்தின் தலைவர் கியோஷி டாக்டர் ஸ்டாலின், துணைத் தலைவர் டத்தோ முனியாண்டி, கோலா மூடா மாவட்ட அதிகாரி ஹாஹி அப்துல் காபார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ரீவர் ஃப்ரான்ட் சிட்டியில் நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.


