
மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) நாடு முழுவதும் மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தொடர்ந்து பெற்று, வேகமாக வளர்ந்து வரும் அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு கிடைத்து வரும் வரவேற்பு, எம்ஐபிபியின் வளர்ச்சிப் பாதையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் எம்ஐபிபி போட்டியிடும் முடிவு, கட்சியின் அரசியல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களிலும் கட்சி தனது பங்களிப்பை உறுதியுடன் பதிவு செய்யத் தயாராக உள்ளது.
இந்தத் தேர்தல்கள் வெறும் அரசியல் போட்டிகளாக அல்லாமல், இந்திய சமூகத்தின் குரலை சட்டமன்றத்தில் வலிமையாக ஒலிக்கச் செய்யும் வரலாற்றுச் சந்தர்ப்பமாகவும் அமைகின்றன. மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சமூக முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் மேம்பாடு போன்ற விடயங்களை மையமாகக் கொண்டு எம்ஐபிபி தனது அரசியல் பயணத்தை தொடர்கிறது.
இன்று கட்சிக்கு கிடைத்து வரும் மகத்தான ஆதரவு, எம்ஐபிபியின் கொள்கைகள் மற்றும் இலக்குகள் மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளதற்கான சான்றாகும். இந்த நம்பிக்கையை பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுத்து, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவதே எம்ஐபிபியின் உறுதிப்பாடாகும்.
வரவிருக்கும் தேர்தல்கள், எம்ஐபிபியின் வளர்ச்சியையும் மக்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணங்களாக அமையும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
“மக்களின் நம்பிக்கையே எங்கள் பலம்; சேவையே எங்கள் அரசியல்.”
ஜி.வி. கௌதம்
மாநில தகவல் தலைவர்
மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) – கெடா மாநிலம்


