
“என்னை வழிபடுதல், ஆடம்பரம் இல்லாமல் இருத்தல், என் கதைகளைக் கேட்டல், என்னை நினைத்து உருகுதல், எந்தப் பயனையும் எதிர்பாராதிருத்தல் இத்தகைய உயரிய பண்புகள் எவரிடம் உள்ளதோ, அவர்களே உண்மையான பக்தர்கள்.
அவர்களே சிரேஷ்டர்கள், தவசிகள், வித்வான்கள், அப்படிப்பட்டவர்களுக்கு ஞானத்தை உபதேசிக்கலாம். அவர்களிடமிருந்து ஞானத்தையும் பெறலாம்.
அவர்கள் என்னைப் போல ஆராதனைக்கு உரியவர்கள்” என்று ஸ்ரீ கருடன் கூறியதாக ‘காருடம்’ என்னும் நூல் தெரிவிக்கிறது.
ஹர்ஷனால் எழுதப்பட்ட ‘நாகா நந்தம்’ என்ற நாடக நூலின் 4, 5 அத்தியாயங்களில் இரண்டு செய்யுள்களில் கருடனின் சக்தி, கருடனின் கருணை பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.


