
சுபாங் அக் 28
தீபத் திருநாளை கொண்டாடவிருக்கும் அனைத்து இந்துக்களுக்கும் பாத்திக் ஏர் குழும உறுப்பினர்கள் தங்களின் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பாத்திக் ஏர் விமான நிறுவனத்திற்கு வற்றாத ஆதரவை வழங்கி வரும் மலேசிய இந்தியர்களுக்கு இவ்வேளையில் இவர்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.பாத்திக் ஏரின் பயணிகள் மற்றும் சரக்கு விற்பனை பிரிவின் தலைமை நிர்வாகி நவா, விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி பவாணி, விளம்பர பிரிவு தலைமை அதிகாரி சுரேஸ், வாடிக்கையாளர் அனுபவ தலைமை அதிகாரி மஹேன் மற்றும் குழும உறுப்பினர்கள் தங்களின் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.பாத்திக் ஏர் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இன்னும் பல இடங்களுக்கு சிறகடிக்க வியூகத் திட்டங்களை வகுத்து வருகிறது.


