
ஜொகூர் பாரு ஜன 16
இங்குள்ள லார்க்கின் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள இந்துக்கள் கலந்துகொண்டு கோலாகலமாக இந்த விழாவை கொண்டாடினர்.
புதிய பொங்கல் பானைகள் வைத்து பொங்கலிட்டு நமது பாரம்பரிய விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
பிறகு இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலயத்தின் தலைவர் தொண்டர் மணி சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் இது போன்ற பாரம்பரிய கொண்டாட்டம் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.


