
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருகிறது என ரஷியா குற்றம்சாட்டியது.
இதற்கிடையே, உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரில் ரஷியாவுக்கு ஆதரவு அளித்து அந்நாட்டுக்கு வடகொரியா தங்களின் ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
உக்ரைனுடன் போரிட்டு ரஷியாவிற்கு உதவ 12,000 ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 3,000 வடகொரிய வீரர்கள் கடந்த சில நாளுக்கு முன் ரஷியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தென்கொரிய எம்.பி. எச்சரிக்கை விடுத்திருந்தார்.


