
கோலாலம்பூர் ஏப் 25
ஆசியான் புத்துணர்வு கண்காட்சியை தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் மற்றும் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தொடைக்கு வைத்தனர்.
இந்த கண்காட்சி தேசிய அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்றது.
ஆசியான் அமைக்கப்பட்டது தொடர்பான சேகரிப்புகள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டது.

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த கலை மற்றும் கலாச்சார அம்சங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்த கலாச்சாரம் தொடர்பான கண்காட்சிகள் நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட வேண்டும் என துணையமைச்சர் சரஸ்வதி கூறினார்.
ஆசியான் எப்படி உருவாக்கப்பட்டது, அதன் நோக்கங்கள் என்ன என்பதை இந்த கண்காட்சி மூலம் மக்கள் தெரிந்து கொள்ள இயலுமென அவர் சுட்டிக் காட்டினார்.


