
மீடீயா குளோபல் நிறுவனத்தின் 2025 அனைத்துலக சிறப்புமிக்க சாதனையாளர்கள் விருது எதிர்வரும் 20 ஏப்ரல் 2025-ல் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஜொகூர் பாரு ஹோலிடே இன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் பால்ரூமில் இந்த விருது நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக மீடீயா குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் எம்.ராகவி பவனேஸ்வரி கூறினார்.
இந்த சாதனையாளர்கள் விருது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விருது நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மட்டுமே அழைக்கப்படுவர்.
ஆகையால் பார்வையாளர்கள் 0109181891 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அழைப்பிதழ்களை பெற்றுக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


