
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அப்போது காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்படி ஏழு வாரங்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் முடிவடைந்த பிறகு மேலும் போர் இடைநிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


