
ஜொகூர் பாரு பிப் 20
இங்குள்ள ரினி தோட்ட தமிழ் பள்ளியின் 186 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டன.
ஜொகூர் மாநில மஇகா சுல்தானா ரோகாயா அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் இந்த உதவியை வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் சுல்தானா ரோகாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாரன் கலந்து கொண்டார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சுல்தானா ரோகாயா அறக்கட்டளை மற்றும் ஜொகூர் மாநில மஇகா தொடர்ந்து இது போன்ற உதவிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த உதவி பெற்றோர்களின் சுமைகளை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.


