
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியின் அம்னோ,மஇகா மற்றும் மசீச வேட்பாளர்களுக்கு பாஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைமைத்துவம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியின் அம்னோ, மஇகா மற்றும் மசீச வேட்பாளர்களுக்கு தங்களின் ஆதரவை வழங்க வேண்டும் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாக்கியுடின் அஸ்ஸான் கூறினார்.
தேசிய முன்னணியை பிரநிக்கும் இந்த 3 கட்சிகளுக்கு பாஸ் உறுப்பினர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
இது பாஸ் கட்சி தலைமைத்துவத்தின் நிலைப்பாடு என்பதால் கட்சி உறுப்பினர்கள் இதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார் அவர்.
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி மற்றும் பாஸ் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசியல் கூட்டணி சேர்ந்துள்ளது.


