
2026 பேராக் மாநில அளவிலான ருக்கூன் தெத்தாங்கா வட்டார ஒற்றுமை நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டார்.
நாட்டின் அடித்தட்டு மக்களின் நல்லிணக்கத்தை வலுப்படுத்த தேசிய ஒற்றுமை துறை அமைச்சு முக்கிய பங்காற்றி வருவதாக தமதுரையில் யுனேஸ்வரன் கூறினார்.
பல இன மக்கள், சமயம் மற்றும் கலாச்சாரத்தை ஒற்றுமைப்படுத்த ருக்கூன் தெத்தாங்கா வட்டாரம் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்த சமூகத்தை உருவாக்க அமைச்சு பல்வேறு சமூக நல திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் நிலைத்தன்மைக்கு ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் வலிமையுடன் இருக்க வேண்டும் என செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்நாட்டில் உள்ள பல இன மக்களிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு மிகவும் அவசியம் என்றார் அவர்.


