
செப்பாங் அக் 28
உலகின் தலைசிறந்த முன்னணி மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா குழுமத்தினரின் இந்திய அதிகாரிகள் தங்களின் இனிய தீபாவளி கொண்டாட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ஏர் ஆசியா விமானங்களில் பல நாடுகளுக்கு மலிவு கட்டணத்தில் சிறகடிக்கும் அனைத்து இந்திய பயணிகளுக்கும் இவர்கள் தங்களின் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மலிவு கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்கி வரும் ஏர் ஆசியா குழும விமான நிறுவனத்திற்கு உங்களின் ஆதரவு தொடர வேண்டும் என தங்களின் வாழ்த்து செய்தி இவர்கள் கேட்டுக் கொண்டனர்.
தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைத்து மலேசிய இந்துக்களுக்கும் ஏர் ஆசியா அரசாங்க தொடர்புகளுக்கான தலைமை அதிகாரி விஜய பிரியா, பாதுகாப்பு தகவல் ஆய்வு அதிகாரி ஈஸ்வரர், அரசாங்க தொடர்புகளுக்கான நிர்வாகி பிரேம்குமார், ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் தலைமை விமான மற்றும் வாடிக்கையாளர்கள் அனுபவ அதிகாரி கேசவன் சிவானந்தம் மற்றும் ஏடிஈ டிஜிட்டல் தலைமை செயல்முறை அதிகாரி மஹேஷ் குமார் மற்றும் தொடர்புகளுக்கான உயர்நிலை அதிகாரி விசித்ரா நடேசன் ஆகியோர் தங்களின் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
எதிர்வரும் 15 நவம்பர் 2024 ஆப்பிரிக்காவின் கென்யா தலைநகரான நைரோபி மற்றும் 16 நவம்பர் 2024 அழகிய அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேருக்கும் ஏர் ஆசியா சிறகடிக்கவிருக்கிறது….


