
தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹாமிட்டின் புதல்வியான டத்தோ அஸ்லினாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற நடைபெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அமைச்சின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டு டத்தோ அஸ்லினாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
ஒற்றுமை துறை அமைச்சிலுள்ள ஒவ்வொருவருக்கும் டத்தோ அஸ்லினா முன் மாதிரியாக விளங்கி வருவதாக சரஸ்வதி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.
டத்தோ அஸ்லினா தொடர்ந்து ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் இருக்க தாங்கள் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டார்.


