
மலாக்காவில் ஹாரி ராயா மடானி கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆயர் கெரோவில் உள்ள மலக்கா அணைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா மற்றும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி கலந்து கொண்டனர்.

மேலும் தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங், துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ சலேஹா முஸ்தபா, தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ செங் உட்பட அதிகமானோர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கொண்டாட்டத்தில் பல இன மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கலந்துகொண்டு அனைவருக்கும் பலவகையான சுவையான உணவுகள் வழங்கப்பட்டது.


