
ஜொகூர் மாநில மசீச ஏற்பாட்டில் சீன புத்தாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
மசீச தேசிய தலைவரும் ஜொகூர் மசீச தலைவருமான டத்தோ டாக்டர் வீ கா சீயோங், ஜொகூர் மஇகா தலைவரும் மாநில ஆட்சி குழு உறுப்பினர் ரவீன் குமார் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சிங்க நடனத்துடன் இந்த கொண்டாட்டம் ஆரவாரமாக நடைபெற்றது.
பல இனங்களை சேர்ந்த மக்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


