
ஸ்கூடாய் பிப் 20
சுவாமி விவேகானந்தரின் 162 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இங்கு ‘ இரத்தம் மற்றும் உடல் உறுப்பு தான’ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மலேசிய இந்து சங்க கூடாய் பேரவையின் இளைஞர் பிரிவு மற்றும் மஇகா ஜொகூர் மாநில சமயப் பிரிவு ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தது.
இங்குள்ள சுல்தானா அமீனா அரசு மருத்துவமனை மற்றும் மைடின் மால் மூர்த்தியாரா ரினியின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த இரத்த மற்றும் உடல் உறுப்பு தான நிகழ்ச்சி அதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் சேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இஸ்காண்டார் புத்ரி சட்டமன்ற உறுப்பினர் பண்டக் சிறப்பு வருகை புரிந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மக்கள் வருகை புரிந்து ஆதரவு தெரிவித்தனர்.


