
நல்லதொரு வாழ்வு பொங்கிட அஷ்ட லட்சுமிகளும் இல்லத்தில் தங்கிட தமது இனிய பொங்கல் வாழ்த்துக்களை பிரதமர் இலாக்கா
(சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துக்கொண்டார்.
பொங்கல் பானை வழிவது போல உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சியிலும் செல்வமும் பொங்கிடு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உறவுகளின் வீட்டில் புன்னகை பொங்க.. இனம் புரியா இன்பம் மனதில் பொங்க… நண்பர்கள் சூழல் மகிழ்ச்சி பொங்க பொங்கட்டும் இந்த தைப்பொங்கல்.
அன்பும் ஆனந்தமும் பொங்கிட.. அறமும் வளமும் தளைத்திட .. இல்லமும் உள்ளமும் பொங்க நல்வாழ்த்துக்கள்.
அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும் புதிய தொடக்கங்களையும் கொண்டு வர நாம் இறைவனை பிரார்த்திப்போம் என தமது பொங்கல் வாழ்த்து செய்தியில் குலா கேட்டுக் கொண்டார்.


