
தெற்கு லெபனானில் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையை (யுனிஃபில்) திரும்பப் பெறுவதற்கு அரசாங்கம் ஒரு காப்புத் திட்டத்தை வைத்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
இராணுவ வீரர்களை மற்ற நாடுகளுடன் சேர்த்து லெபனானுக்கு அனுப்பும் நாட்டின் அர்ப்பணிப்பான செயல் இப்போதும் தொடர்கின்றது என்று காலித் நோர்டின் கூறினார்.
மலேசியா முதன்முதலில் லெபனானுக்கு அமைதி காக்கும் பணிக்காக மலேசிய படைகளை அனுப்பத் தொடங்கியபோது எதிர்கொள்ளும் தற்போதைய சூழ்நிலையை பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மற்ற நாடுகளுடன் கலந்துரையாடும் அதே வேளையில், நிலைமையைக் கண்காணிக்க யுனிஃபிலுடன் தனது அமைச்சகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாக காலிட் கூறினார்.
தாக்குதல்களை எதிர்கொள்வது மால்பட் அணி மட்டுமல்ல. இந்தோனேசியா மற்றும் அயர்லாந்து போன்ற பிற நாடுகளின் அணிகளும் இதே நிலையில் உள்ளனர்.


