
வரும் ஜூலை 11 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மஇகா கூலாய் தொகுதி இளைஞர் பிரிவு விளையாட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வுக்கு மஇகா உதவி தலைவர் டத்தோ முருகையா சிறப்பு வருகை புரிந்தார்.
இங்குள்ள கூலாய் இன்ராபுரா அரங்கில் நடந்த இந்த விளையாட்டு நிகழ்வில் முன்னாள் காஹாங் சட்டமன்ற உறுப்பினர் வித்யானந்தனும் கலந்து கொண்டார்.
ஜனநாயக நடைமுறையில் இளைஞர்களின் பங்கின் அவசியம் குறித்து டத்தோ முருகையா தமதுரையில் வலியுறுத்தினார்.
ஜொகூர் மாநில மக்களுக்கு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரும் மாநில தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு பிளவு படாத ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக இளைய வாக்காளர்கள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் சேவைகளை சீர்தூக்கி இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

புக்கிட் பாத்து தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் பன்னீர் செல்வத்திற்கு திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் அபிஸ் தலைமையிலான மாநில அரசாங்கம் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையில் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு பல முன்னேற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


