Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் 219 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன: போலிஸ்

சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் மொத்தம் 219 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததாக கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில் 220 வீடுகள் பாதுகாப்பாகவும் பாதிப்பின்றியும் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று சிலாங்கூர்  போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை (ஜேபிபிஎம்), பயன்பாட்டு நிறுவனங்கள்,  உள்ளூர் அதிகாரிகள் ஆகியோரால் நிலநடுக்க மையத்திலிருந்து 325 மீட்டர் சுற்றளவில் 439 வீடுகள் பற்றிய இறுதி  மதிப்பீட்டில் இது கண்டறியப்பட்டது.

மொத்தத்தில், 87 வீடுகள் 20 சதவீதத்திற்கும் அதிகமான பெரிய சேதத்தை சந்தித்தன.

மேலும் 132 வீடுகள் 20 சதவீதத்திற்கும் குறைவான சிறிய சேதத்தை சந்தித்தன என்று அவர் கூறினார்.

இன்று கோலாலம்பூருக்கு அருகிலுள்ள புத்ரா ஹைட்ஸ் சம்பவக் கட்டுப்பாட்டுச் சாவடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular