
ஸ்கூடாய் பிப் 15
ஸ்கூடாய் அருள்மிகு பாலசுப்பிரமணிய ஆலய திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் தலைவர் டத்தோ கே.எஸ் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் சுமார் 10,000 பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பக்தர்கள் பால்குடங்கள் மற்றும் காவடிகள் ஏந்தி முருகப்பெருமானுக்கு தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

இந்த தைப்பூச கொண்டாட்டத்தில் ஜொகூர் மாநில போலீஸ் படைத்த தலைவர் டத்தோ குமார் தலைமையில் காவல் படையினரும் கலந்து சிறப்பித்தனர்.
காலத்திற்கு வருகை புரிந்த அனைத்து மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த தைப்பூசம் கொண்டாட்டம் அமைதியுடனும் சிறப்புடனும் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் டத்தோ பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


