
செப்பாங் செப் 14
AirAsia Group-ன் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களான AirAsia Malaysia (விமானக் குறியீடு AK) மற்றும் AirAsia X Malaysia (விமானக் குறியீடு D7) , தற்போது பணியில் உள்ள அனைத்து விமான இயக்கப் பணியாளர்களுக்கும் போதைப்பொருள் பரிசோதனையை நிறைவு செய்துள்ளன.
இந்த நடவடிக்கை, பாதுகாப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணிக்குத் தகுதியான உடல் மற்றும் மனநிலையின் மிக உயர்ந்த தரங்களை தொடர்ந்து பேணுவதற்கான AirAsia-வின் நீண்டகால உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்தப் பரிசோதனையில் AirAsia மற்றும் AirAsia X Malaysia நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து செயலில் உள்ள இயக்கப் பணியாளர்களும், அதாவது விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் , இடம்பெற்றனர். பரிசோதனை செய்யப்பட்ட 100% பேரின் முடிவுகளும் போதைப்பொருள் பயன்பாடு இல்லை (negative) எனத் தெரியவந்துள்ளது.
AirAsia Group-ன் குழும தலைமை செயல்பாட்டு அதிகாரி கேப்டன் சுரேஷ் பாங்கா கூறியதாவது:
“AirAsia நிறுவனத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் பாதுகாப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அடிப்படையானவை. போதைப்பொருள் பயன்பாட்டை நாங்கள் எந்தவிதத்திலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
“அனைத்து விமானிகளும் கேபின் பணியாளர்களும் கடுமையான ‘விமானப் பணிக்குத் தகுதி’ விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதில் வழக்கமான போதைப்பொருள் மற்றும் மதுபானப் பரிசோதனைகளும் அடங்கும். இவை அனைத்தும் குழுமத்தின் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்புக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.

இதன் மூலம் எங்களது விமான இயக்கப் பணியாளர்கள் தங்களது கடமைகளை பாதுகாப்பாகவும் தொழில்முறையாகவும் மேற்கொள்ளும் உடல் மற்றும் மனத் தகுதியுடன் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
“பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் தொழில்துறை சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, எங்களது செயல்பாடுகள் முழுவதும் இந்தக் கடுமையான தரநிலைகளை தொடர்ந்து பேணுவோம்.”
இந்த போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்ள ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை (AADK) -க்கு AirAsia நன்றி தெரிவித்துள்ளது.


