
ஜொகூர் பாரு ஆக 15
மலேசிய இந்து ந்து சங்க ஜொகூர் கிளையின் தலைவராக தேர்வு பெற்ற தொண்டர்மணி விஜயன் கந்தசாமிக்கு லார்க்கின் செல்வ விநாயகர் ஆலயத்தின் தலைவர் தொண்டர்மணி டாக்டர் சுப்பிரமணியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இடைவிடாத உழைப்பு, சமூக சேவைகளுக்கான அர்ப்பணிப்பே விஜயன் இன்று இந்த பதவியை வகிப்பதாக அவர் சொன்னார்.
‘உங்கள் வழிநடத்தலில் ஜொகூர் இந்து சங்கம் இன்னும் சிறப்பாக செயல்படும்’ என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜொகூர் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு சிறப்பான சேவைகளை வழங்க தாம் வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.


